தேசியமட்ட பெண்கள் உதைபந்தாட்டம் 20 வயது அணி இரண்டாமிடம்
9th October, 2023
கல்வி அமைச்சினால் நடாத்தப்படும் அகில இலங்கைப் பாடசாலைகளுக்கிடையிலான பெண்களுக்கான உதைபந்தாட்டப் போட்டியில் மகாஜனக் கல்லூரியின் 20 வயது அணி இரண்டாமிடம் பெற்றுள்ளது இப்போட்டி இன்று 09.10.2023 திங்கள் காலை 11.30 மணிக்கு யூனியன் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.
இறுதிப்போட்டியில் மகாஜனக் கல்லூரியை எதிர்கொண்ட பொலன்றுவை பென்டிவெவா மத்திய கல்லூரி 2:0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்ற மகாஜனா இரண்டாமிடம் பெற்றது.
மகாஜனா தொடர்ந்து இரண்டு வருடங்கள் (2019, 2020 உம் 2021 உம் கொரோனா பெரும் தொற்றுநோயால் நடைபெறவில்லை, 2022) சாம்பியனாகிய நிலையில் மூன்றாவது வருடமும் சாம்பியனாக வேண்டும் என்ற உத்வேகத்துடன் களமிறங்கியது.