26th February, 2024
இலங்கை பாடசாலைகள் உதைபந்தாட்டச் சம்மேளனத்தால் 20 வயதுப் பெண்கள் அணிகளுக்கிடையில் தேசிய மட்டத்தில் நடாத்தப்பட்ட உதைபந்தாட்டத் தொடரில் மகாஜனா இரண்டாமிடம் பெற்றுள்ளது. இப்போட்டி அனுராதபுரத்தில் இன்று 26.02.2024 நடைபெற்றது.
இறுதியாட்டத்தில் குருணாகல் மலியதேவ பெண்கள் கல்லூரியை எதிர்கொண்ட மகாஜனா 1:0 என்ற கோல்கள் கணக்கில் தோல்வியுற்று இரண்டாமிடத்தை பெற்றது.
