தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தால் அகில இலங்கை ரீதியில் நடாத்தப்பட்ட இளம் பாடகருக்கான போட்டியில் மகாஜனக் கல்லூரி மாணவி மதுவந்தி மயூரன் முதலாம் இடம் பெற்று இளம் பாடகருக்கான விருதைப் பெற்றுக் கொண்டார்.
இதில் சிறப்பம்சம் 15 தொடக்கம் 29 வயது வரையான பிரிவில் மிகவும் குறைந்த வயதில் மதுவந்தி இவ்விருதைப் பெற்றுள்ளார். மாகாண மட்டத்தில் 150 இற்கும் மேற்பட்ட போட்டியாளர்களுடன் பங்குபற்றி முதலிடம் பெற்றார்.
இங்கு குறிப்பிட வேண்டிய இன்னொரு சிறப்பம்சம் இப் போட்டியில் பல்கலைக்கழக இசைத்துறை மாணவர்கள் என பலர் பங்குபற்றி இருந்தும் மதுவந்தியின் தனித்திறமையால் முதலிடம் பெற்றார்.
இங்கு குறிப்பிட வேண்டிய இன்னொரு சிறப்பம்சம் இப்பாடலை இயற்றி வழங்கியவர் பெரு மதிப்பிற்குரிய மகாஜனக்கல்லூரி பழைய மாணவனும் முன்னாள் ஆசிரியருமான பார்வதிநாதசிவம் பாலமுரளி. இப்பாடலுக்கு இசை அமைத்தவர் எமது கல்லூரி முன்னாள் இசை ஆசிரியர் பெரு மதிப்பிற்குரிய செல்வி முருகையா ஜெயகௌரி.பின்னணி இசை வழங்கியவர் பெருமதிப்பிற்குரிய திரு.முரளி(சத்தியன்) அவர்கள்.
மாணவி மதுவந்திக்கு பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.