தெல்லிப்பழை பிறப்பிடமாகவும், உடுவிலை வசிப்பிடமாகவும் கொண்டவரும், மகாஜனக் கல்லூரி ஆசிரியருமான திருமதி ஜெயந்தி ஜெயதரன் அவர்கள் 25-04-2024 அன்று காலமானார்.
அன்னார் 2014 ஆம் ஆண்டிலிருந்து மகாஜனக் கல்லூரியில் உடற்பயிற்சி ஆசிரியராகவும், உபஅதிபராகவும் சிறப்பான சேவை ஆறியவர். மகாஜனக் கல்லூரியில் வலைப்பந்தாட்டத்தை மீண்டும் தொடங்கி, மாணவிகளைப் பயிற்றுவிப்பதில் அயராது உழைத்தவர் திருமதி. ஜெயந்தி ஜெயதரன் ஆசிரியர் அவர்கள்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 28-04-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று முற்பகல் 10.00 மணியளவில் மானிப்பாய் வீதி, உடுவில் (மருதனார் மடச்சந்தியில் இருந்து மானிப்பாய் போகும் போது, உடுவில் மகளிர் கல்லூரிக்கு 200M முன்பாக இடப்பக்கத்தில்) இல் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, புகழ் உடல் தகனம் செய்யப்படும்.
இத்துயரச் செய்தியை உங்களுக்கு அறிவிப்பதுடன், எமது கல்லூரி சமூகம் சார்பில் ஆழ்ந்த அனுபதாபங்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்